தஞ்சாவூர், ஏப்.25-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணியில் உள்ள ரயில்வே ஸ்டேஷ னில் தற்போது ஒரே ஒரு பயணி கள் ரயில் மட்டுமே நின்று செல் கிறது. இந்த வழியாக இயக்கப் படும் மூன்று விரைவு ரயில்களில், இரண்டு விரைவு ரயில்கள், பேரா வூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.
இதனால் பயணிகள் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக் கோட்டை அல்லது அறந்தாங்கி ரயில் நிலையம் சென்று பயணம் செய்ய வேண்டி உள்ளது. பேராவூ ரணி பகுதி ரயில் பயணிகளின் நலன் கருதி அனைத்து விரைவு ரயில் களும் பேராவூரணி ரயில் நிலை யத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி நகர வர்த்தகர் கழ கம் ஒருங்கிணைப்பில், அனைத்து கட்சிகள், இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு முற்றுகைப் போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து ரயில் நிலையத் தில் காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். இதனிடையே 500க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிடத் திரண்டனர். போராட்டத்தின் நோக்கம் குறித்து தி.க, திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, மதி முக, வி.சி.க, நாம் தமிழர், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், லயன்ஸ், ரோட்டரி உள் ளிட்ட சமூக அமைப்புகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பேசினர்.
இதையடுத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் மா.கோவிந்தராசு, எஸ்.வி.திருஞானசம்பந்தம் உள் ளிட்ட மக்கள் பிரநிநிதிகளுடன், ரயில்வே அதிகாரி பெத்துராஜ், ரயில்வே காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன், வட்டாட்சியர் த.சுகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், இரு வார காலத்திற்குள் ரயில்வே உயர் அலு வலர்களைச் சந்தித்து கோரிக்கை களை முன்வைக்க ஏற்பாடு செய்து தரப்படும். மக்களின் உணர்வுகள் ரயில்வே அலுவலர்களுக்குத் தெரி விக்கப்ப்படும். ஓரிரண்டு மாதங்க ளுக்குள் ரயில் பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித் தனர். இதை ஏற்று முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.