தஞ்சாவூர், ஆக.1-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் விவசாயி குணசேகர் (42). இவர் செவ்வாய்க் கிழமை காலை, அவரது தென்னந்தோப்பில், வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தக வல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர், குணசேகர் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசா ரணையில், குணசேகரின் ஆடு, பக்கத்தில் உள்ள தோப்பில் அடிக்கடி மேய்ந்துள்ளது. இது தொடர்பாக, அந்த தோப் பில் வேலை பார்க்கும், ஆலத் தூரைச் சேர்ந்த முத்துசெல் வன் (27) என்பவர் பலமுறை எச்சரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முத்துசெல்வனுக்கும், குணசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முத்துசெல் வன் வளர்க்கும் நாயை, குண சேகரன் அடித்துள்ளார். இத னால் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப் போது, குணசேகரின் தலை யில் கட்டையால் அடித்த முத்து செல்வன், அருகில் இருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய முத்துசெல்வனை காவல் துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர்.