districts

கோட்டாட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் புகார்

பட்டுக்கோட்டை, பிப்.23 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுகோட்டை, பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறை  தீர்க்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சி யர் ஜெயஸ்ரீ தலைமையில் வியாழக் கிழமை நடைபெற்றது.  சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனி வட்டாட்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், தலைமை நில அளவையர் செந்தில்குமார் மற்றும்  அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் தலைவர் ஏ.மேனகா அளித்த கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது:  பட்டுக்கோட்டை, பேராவூரணி பேருந்து நிலையங்களில் மாற்றுத்திற னாளிகள் பயன்படுத்தும் வகையிலான தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர  வேண்டும். சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் ரெண்டாம்புளிக்காடு ஊராட்சியில் அம்பேத்கர் நகர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியு மாக உள்ளது. இந்த சாலையில்தான் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வரு கின்றனர். பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இச்சாலை இருப்ப தால் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.  கொள்ளுக்காடு ஊராட்சியில் நியாயவிலைக் கடை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதால் மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைக்கு  சென்றுவர சிரமமாக இருக்கிறது. எனவே குடியிருப்பு பகுதிக்கு அருகி லேயே நியாய விலைக் கடையை அமைத்து தர வேண்டும்.  தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும், ரெண்டாம்புளிக்காடு இந்தியன் வங்கி கிளையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் தர மறுக்கும் போக்கு நீடிக்கிறது. எனவே தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கடும் ஊனமுற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு குறைந்த சதவீதமே வழங்கப்படுவதால், சலுகைகள் பெறு வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,  நியாயமான முறையில் மாற்றுத்திற னாளிகளின் பாதிப்பு சதவீதத்தை மருத்துவர்கள் குறிப்பிட்டு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.  கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னாள் மாவட்ட துணைத் தலை வர் கே.கிருஷ்ணமூர்த்தி, சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.