தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு நா கேஸ்வரி என்ற மனைவியும், சிவக் குமார், அமிர்தலிங்கம், ராமச்சந்திரன் என்ற மகன்களும், கோகிலாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சுப்பையா கடந்த 2013 டிச.11 அன்று மற்றும் 2014 நவ.18 அன்று என இரண்டு முறையாக, தஞ்சா வூர் கத்தோலிக் சிரியன் வங்கியில், தனக்கு சொந்தமான 1912.5 சதுர அடி இடமும், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டின் ஆணவங்களை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இதற்காக உரிமை மூல ஆவ ணங்கள் ஒப்படைப்பு பத்திரத்தை எழுதி தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலு வலகத்தில் பதிவு செய்து வங்கியில் வைப்பீடு செய்திருந்தார். மேலும், சுப்பையா பெற்ற கடனுக்காக 15 ஆயி ரம் ரூபாய் வீதம் வங்கிக்கு தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று சுப்பையா இறந்துவிட்டார். இதையடுத்து சுப்பை யாவின் இறப்பு சான்றிதழையும், வாரிசு சான்றிதழையும் பெற்று அவரது வாரிசுதாரர்கள் வங்கியில் தாக்கல் செய்தனர். மேலும், இறந்துபோன சுப்பையாவின் வாரிசுதாரர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய அனைவரும் கை யொப்பமிட்ட கடிதம் ஒன்றினையும், அதே தேதியில் வங்கியில் கொடுத்துள் ளனர். இதையடுத்து வங்கியில் சுப்பையா வழங்கியிருந்த அசல் ஆவ ணங்களையும், சுப்பையா கடன் தொ கையில் காப்பீடு கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆவணங்க ளையும் வழங்க கோரிக்கை வைத்த னர். ஆனால் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர், உரிய அசல் ஆவணங்களை வழங்காமலும், கடன் முழுவதையும் அடைக்கப்பட்டதற்கான ‘கடன் நிலு வையில்லா சான்றிதழையும்’ வழங்கா மல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்த சுப்பையா மனைவி மற்றும் மகன்கள் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். புகாரினை புதன் கிழமை விசாரணை செய்த, ஆணையத் தலைவர் த.சேகர், ஆணைய உறுப்பி னர் கே.வேலுமணி ஆகியோர் வங்கி நிர்வாகம் அசல் ஆவணங்களை 45 தினங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒருவேளை அசல் ஆவ ணங்கள் கிடைக்கப் பெறாவிட்டால், அசல் ஆவணங்கள் சம்பந்தமாக ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்ட பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உரிமை மூல ஆவணங்கள் ஒப்படைவு பத்திரத்தினை ரத்து செய்து, அடமான வரவு ரசீது, கடன் நிலுவை யில்லா சான்று வழங்க வேண்டும். நிலு வைத்தொகையை செலுத்திய ஐந்து வருடங்களுக்குப் பிறகும் ஆவ ணங்கள் கிடைக்கப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை கடந்த 2019 ஆம் ஆண்டு நவ.7 முதல் இழப்பீடு தொகையை வழங்கும் நாள் வரை 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செல வுக்காக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.