districts

img

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா

எம்.பி., எம்எல்ஏ பங்கேற்பு தஞ்சாவூர், அக்.25 -  தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றி யம் சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் ச.முரசொலி தலைமை வகித்து, ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகர ணங்கள், மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு வங்கிக் கடன் இணைப்பு  ஆகியவற்றை வழங்கி சிறப்புரை யாற்றினார். சேதுபாவாசத்திரம் ஒன்றி யக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக் கம், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட 26 ஊராட்சிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உப கரணங்கள் வழங்கப்பட்டன. மேலும்,  30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.98 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. மாணவர்-ஊராட்சி தலைவருக்கு பாராட்டு  கொன்றைக்காடு அரசு உயர் நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் துர்வன், 11 வயதுக் குட்பட்டோர் பிரிவில், மாவட்ட அள விலான கராத்தே போட்டியில் இரண்டு பரிசுகளும், திருவாரூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட் பரிசும் பெற்றார். மாணவர் தனது சான்றிதழை நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பின ரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோல், காலகம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் விருது உள்ளிட்ட 5  விருதுகளை பெற்றமைக்கு, நாடாளு மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பி னர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர்.