districts

img

பேராவூரணி இளைஞரை கரம் பிடித்த வங்கதேசப் பெண் தமிழ் முறைப்படி நடந்த திருமணம்

தஞ்சாவூர், பிப்.10-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி-இளமதி தம்பதி. இவரது மகன் குலோத்துங்க சோழன் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் வங்கதேச நாட்டை பூர்வீகமாகக் கொண்டவருமான ராதா மதாப் சர்மா - அனிதா சர்மா தம்பதியரின் மகளுமான, மலேசியா ஹானர்ஸ் செகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அனிலா சர்மாவுக்கும் இடையே காதல் அரும்பியது. குலோத்துங்க சோழன் - அனிலா சர்மா காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, பேராவூரணி திருமண மண்டபத்தில் இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது.  தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் திரளாக கலந்து கொண்டனர். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.