districts

பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க உறுதி

ராபர்ட் ப்ரூஸ்  எம்.பி., தகவல் திருநெல்வேலி, அக் .30- பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ரயில்வே பொதுமேலாளர் உறுதிய ளித்துள்ளதாக நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டி பின் வருமாறு -தமிழ கத்தின் வற்றாத ஜீவநதி என சிறப்பு  பெற்றுள்ள தாமிரபரணி ஆற்றில் பல் வேறு இடங்களில் கழிவு நீர் கலந்து தண்ணீர் மாசு அடைந்து வருவதாக பல தரப்பிலும் புகார்கள்  தெரிவிக்கப்பட்டன. இதனால் குடிநீர் மாசுபடுகிறது. பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாகவும் புகார்கள் தெரி விக்கின்றனர். இதையடுத்து தாமிர பரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை பார் வையிட்டேன். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். ஆற்றில் காணப்படும் புதர்கள் அகற்றப்படும். அமலை செடிகள், வேலிகாத்தான் செடி கள் முழுவதுமாக அகற்றி, படித் துறைகள் சீர மைத்து நதியை பாது காக்க வலியுறுத்தி உள்ளேன். தாமிரபரணி ஆற்றின் இரு புறத்திலும் கரைகள் பலப் படுத்தப்படும். பாப நாசம் முதல் பல்வேறு இடங்களில் தாமிர பரணி ஆற்றில் காணப்படும் சிதில மடைந்த கல்மண்ட பங்கள் பழமை மாறாமல் சீரமைத்து புதிய பொலிவு பெறும் வகையில் பராம ரித்து பாதுகாக்க வேண் டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தன் னார்வலர்களும் தாமிரபர ணியை பாதுகாப்பு பணி யில் ஈடுபட வேண்டும். நெல்லை ரயில் நிலையத்தை ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்டு உலக அளவில் மிகப் பெரிய ரயில் நிலையமாக மாற்ற ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நெல்லை யை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன். அதற் கான வரைபடங்கள் தயார் செய்யும் பணி நடந்துவருகிறது.மும்பையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கவும், நெல்லையில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் ரயில்கள் இயக்கவும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வரும் வந்தேபாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே பொதுமேலாளர் தெரி வித்துள்ளார். நெல்லை - திருவனந்தபுரம் சாலையில் குலவ ணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் ஒய் வடி வத்தில் மேம்பாலம் அமைக்க நட வடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கான வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு பணிகள் விரை வில் துவங்கும். முன்னாள் முதல மைச்சர் பக்தவச்ச லம் திருவுருவ படத்தை சட் டசபையில் வைக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத் துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.