தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் பாபநாசம் ரோட்டரி கிளப் மெகா அன்னபூர்ணா விழாவை நடத்தியது. இதில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆலோசக உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் உதவி ஆளுநர்கள் செந்தில்நாதன், சரவணன் மற்றும் முன்னாள் தலைவர்கள் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.