காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காந்தி சிலைக்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் மாலையணிவித்து, மரியாதைச் செலுத்தினார். அய்யம்பேட்டை லயன்ஸ் கிளப் சார்பில் அய்யம் பேட்டை காந்தி நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு தலைவர் விஜயராஜன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பாபநாசம் வித்யா பாட சாலை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கபிஸ்தலம் லயன்ஸ் கிளப் தலைவர் குணசேகரன் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தினார். இதில் துரைசாமி, நாச்சியப்பன், அன்வர் அலி, இளைய சேகர் உட்பட பங்கேற்றனர்.