பாபநாசம், செப்.28 - பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் 30 ஆம் ஆண்டு மகா சபைக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த மகா சபைக் கூட்டத்தில் பாபநாசம் கிளை மேலாளர் ஏசுதாஸ் அறிவழகன் வர வேற்றார். நிறுவனத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். 2023-24 இருப்பு நிலை குறிப்பு, தலைவர் உரையை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் வாசித்தார். பூண்டி கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜேந் திரன் தீர்மானங்களை வாசித்தார். இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யாழினி, மாணவர் விவேக் ஆதித்யா, அரசு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் பாப நாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதி களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இயக்குநர் ராஜநந்தினி விக்னேஷ், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் கள், பாபநாசம் பெனிபிட் பண்ட் இயக்கு நர்கள், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.