மயிலாடுதுறை, ஜன.31 - சீர்காழி வனச்சரகம் சார்பில், வனத்துறையின் டிபிஜிபிசிசிஆர் திட்டத்தின் ஒரு அங்கமான கடல் ஆமைகளின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்பு ணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நாகை வன உயிரின காப்பாளர் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகிலுள்ள திருச்சம்பள்ளி வனவியல் விரிவாக்க கோட்ட அலுவலக வளாகத்தில் நடந்த இக்கருத்த ரங்கில், முனைவர் கே.கதிரேசன் கடல் ஆமைகள் குறித்த விழிப்புணர்வு, கடலாமை பாதுகாப்பில் வனத்துறையின் செயல்பாடுகள், மீனவர்கள் பங்கீடு அல்லாமல் கடலாமையின் வரலாற்றுச் சிறப்பு, கடலாமையின் வகைகள் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக உரையாற்றி னார். முனைவர் சிவகணேசன் ஆமைகளின் எண்ணிக்கை குறித்தும் அழிவதும், காப்பதும் குறித்தும், பாலின வேறுபாடுகள், உலக வெப்பமய மாதலினால் வேறுபடுவது குறித்தும் விளக்கிப் பேசி னார். நாகை, கருவேலங்கடை செயிண்ட்.மிக்கேல் அகாடமி பள்ளி (சிபிஎஸ்சி) மாணவர்கள் விழிப்புணர்வு நடனம், நாடகம், பாடல்களை என நடத்தினர். மேலும் இந்திய வனவிலங்கு ஆராய்ச்சி நிறு வன ஆராய்ச்சியாளர்களான பார்வதி, ஆர்.நம்பி யார் மற்றும் லெஷ்மி சந்திரன் ஆகியோர் இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த விவரங்களையும், மற்ற மாநிலங்களில் பயன்படுத்தும் பாதுகாப்பு முறைகளையும், அங்கே இருக்கும் கடற்கரை வகைகள் - அதில் தமிழ்நாட்டிற் கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை சார்ந்த பல்வேறு தகவல்களை பட்டிய லிட்டு வனத்துறை பணியாளர்களுக்கு கூறினர். பறையிசை குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.