திருத்துறைப்பூண்டி ஒன்றியம், வரம்பியம் ஊராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்காத குப்பையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை தவிர்த்து மக்கும் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வலியுறுத்தி மடப்புரம் கடை தெருவில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வரம்பியம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஊராட்சி எழுத்தர் என்.காத்தமுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.