districts

img

ஆசிரியர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா

தஞ்சாவூர், ஜூன் 2-  

    தஞ்சாவூர், தொன்பொஸ்கோ மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணி யாற்றிய ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருதும்,  10 ஆம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா வெள்ளி யன்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மு.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு விருது களை வழங்கினார்.  விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக பணி யாற்றிய ஆசிரியர்கள் 1,700 பேருக்கு சான்றிதழ் களும், 150 பேருக்கு ஒளிரும் ஆசிரியர்கள் விருதும் வழங்கப்பட்டது.

   மேலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சுமித்ரா, தஞ்சாவூர் அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குழந்தை சாமி, வரகூர் அரசு உயர்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு  மாணவி மோனிகா எழுதிய நூல்கள் அமைச்சரால் வெளியிடப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவர் மெ. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

ஆசிரியர் கூட்டணி

   தஞ்சை கல்வி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர்களில் சுமார் 60 பேருக்கு ஒளிரும் ஆசிரியர் விருது கள் வழங்கப்பட்டன.

   இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருவையாறு வட்டார பொருளாளர் வீர.திரி புரா, ஒரத்தநாடு வட்டாரச் செயலாளர் சக்திவேல், தஞ்சாவூர் ஊரகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  உறுப்பினர் அல்லி ராணி ஆகியோர் இவ்விருதுகளை பெற்றுள்ளனர்.