districts

img

பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 30 கலைஞர்களுக்கு விருது

கரூர், ஆக.27 - கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட  அரங்கில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறையின் சார்பாக 2023-2024 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் வழங்கினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலை ஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வரு கிறது.  அந்த வகையில் செவ்வாயன்று 2022- 2023 ஆம் ஆண்டிற்கு கராத்தே, பரதநாட்டி யம் மற்றும் ஓவியத்தில் சிறந்து விளங்கிய 6  கலைஞர்களுக்கு கலை இளமணி விருது  மற்றும் தலா ரூ.4000 ரொக்கம், நாதஸ்வரம்,  ஓவியம், கரகாட்டம், பரதநாட்டியம், கோலாட் டம் மற்றும் குரலிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞர்களுக்கு கலை  வளர்மணி விருதுகள் மற்றும் தலா ரூ.6000  ரொக்கம், கிராமிய பாடல், ஓவியம், நாதஸ்வரம், நாடகம் மற்றும் குரலிசை ஆகிய  கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலை ஞர்களுக்கு கலை சுடர்மணி விருதுகளும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், நாடகம், தவில் மற்றும் ஆர்மோனியம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருதுகள், ரூ.15  ஆயிரம் ரொக்கம், கலை பிரிவு, நாடகம், கிராமிய பாடகி, தவில், நகைச்சுவை நடிகை  ஆகிய கலைகளில் சிறந்து விளங்கிய 6  கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது கள், தலா ரூ.20 ஆயிரம் ரொக்கம் என மொத் தம் 30 கலைஞர்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கி னார். நிகழ்வின் போது கலை பண்பாட்டு  துறை உதவி இயக்குநர் த.செந்தில்குமார், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ந. ரேவதி மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.