பாபநாசம்,நவ.23- 70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை யில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற் கான விருது பாபநாசம் அருகிலுள்ள சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அரசு கொறடா செழியன் ஆகியோர் சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான கேட யத்தை வழங்க, சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் சின்ன பொண்ணு, செயலர் கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் எம்.பி.க்கள் கல்யாண சுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் நீலமேகம், சந்திர சேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தில் 243 தொடக்க கூட்டுறவு சங்கங்களில் மதுக்கூர் தொடக்க கூட்டுறவு சங்கமும், சரபோஜிராஜபுரம் தொடக்க கூட்டுறவு சங்கமும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு சங்க செயலாட்சியர் சின்ன பொண்ணு, செயலர் கலிய மூர்த்தியை உறுப்பினர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.