districts

img

காலமுறை ஊதியம் கேட்டு காத்திருப்புப் போராட்டம்

நாகப்பட்டினம், ஏப்.25-

   காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்  சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்வராணி, மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.பழனி யம்மாள், சிஐடியு மாவட்டத் தலைவர் சிவனருட்செல்  வன், மாவட்டப் பொருளாளர் என்.வெற்றிச்செல்வன் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர்.

  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பேபி, மாவட்டச் செயலாளர் சி.லதா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் து.இளவரசன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.ராமானு ஜம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.