அபாயகரமான நிலையில் உள்ள பிஓவி ஆட்டோக்களை முறையாக பழுது பார்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் மண்டலம் 5 அலுவலகம் ,பேசின் பாலம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டலம் 5ன் சங்க தலைவர் இ. வெங்கடேசன் தலைமை தாங்கினார். செங்கொடி சங்க நிர்வாகிகள் ெஜ.பட்டாபி, பி.சீனிவாசலு, டி.ராஜன், ஜி.முனு சாமி, சி.திருவேட்டை, செல்வமணி, வரதராஜன் உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகள், 300 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.