திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- சிஐடியு ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் மணிகண்டன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியா ளரிடம் புதனன்று கொடுத்த மனுவில் கூறி யிருந்ததாவது: கடந்த 11.6.2024 அன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையம் மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் விமானத்துக்கு செல்லும் பயணி களையும் அவர்களது உடமைகளையும் ஏற்றி விமான நிலையத்திற்கு உள்ளே விட்டு விட்டு வந்தோம். அதேபோல் விமான நிலை யத்தில் உள்ள பயணிகளை விமான நிலை யத்திற்கு வெளியே இறக்கி விட்டுவந்தோம். அதற்காக விமான நிலைய கார் பார்க்கிங் ஒப்பந்ததாரருக்கு அரை மணி நேரத்திற்கு ரூ.80 வீதம் கட்டணம் செலுத்தி வந்தோம். அரை மணி நேரத்திற்கு மேலே செல்லும் பொழுது ரூ.130 கட்டணமாக செலுத்தினோம். ஆனால் 23.7.2024 ஆம் தேதி திடீரென விமான நிலைய நிர்வாகம் நுழைவாயில் முன்பு ஆட்டோ செல்ல அனு மதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைத்து ஆட்டோவிற்கு அனுமதி மறுக்கின்றனர். மேலும் புதுக்கோட்டை மெயின் சாலை யில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிகள் தங்க ளது உடைமைகளை சுமந்து செல்ல முடி யாது. பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதேபோன்று ரூ. 80 வீதம் ஆட்டோவிற்கு நுழைவு கட்டணம் அதிகம். எனவே இதனை மறுபரிசீலனை செய்து ஆட்டோ கட்ட ணத்தை குறைக்க வேண்டும். விமான நிலை யத்திற்கு அருகில் ஆட்டோ நிலையம் அமைத்து ஆட்டோவில் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். மனுவை கொடுத்த போது விமான நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் சுகு மாறன், தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஸ்டாண்ட் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.