districts

அக்.16இல் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், செப்.9 - ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில்  சிறப்பு பேரவைக் கூட்டம் கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்டத்  தலைவர் என்.ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சி.ஆர்.ராஜாமுகமது வரவேற்றார். சிஐ டியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பி.சதீஷ்  வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட புதிய நிர்வாகிகள்  சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி சிறப்புரையாற்றினர். மாவட்டத்தின் புதிய கவுரவத் தலை வராக எம்.தண்டபாணி, மாவட்டத் தலைவராக என்.ரெங்கராஜ், செயலாள ராக வி.பாலசுப்பிரமணியன், பொரு ளாளராக என்.விஜயகுமார், துணை  தலைவர்களாக அலெக்ஸ், கே.மாரி முத்து, எம்.செல்வராஜ், எ.சக்கரைமுக மது, துணைச் செயலாளர்களாக பி.சதீஷ், எஸ்.இப்ராஹிம், சக்திவேல், ஆர்.பாலமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆன்-லைன் அபராதத்தை தமிழக  அரசு கைவிட வேண்டும். ஒன்றிய அரசு  கொண்டு வந்துள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் உள்ளது போன்று வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்குவதுடன், பென்சனை ரூ.3000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தீபா வளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.  கரூர் மாவட்டத்தில் வீடில்லாத  அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக் கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட  வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா  கேட்டு 16.10.2023 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் கவுரவத் தலைவர் எம். தண்டபாணி நன்றி கூறினார்.