districts

img

விளையாட்டு...

கவாஸ்கர் புறக்கணிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்ச்சைக்குரிய விளக்கம்

இந்தியா - ஆஸ்திரேலிய அணி கள் பங்கேற்ற 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் பார்டர் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள்  ஜாம்பவான்) - கவாஸ்கர் (இந்திய கிரிக்கெட் முன்னாள்  ஜாம்பவான்) என்ற பெயரில்  நடைபெற்றது. இந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், அந்த அணிக்கு கோப்பையை ஆலன் பார்டர் மட்டுமே வழங்கினார்.  கவாஸ்கர் மைதானத்தில் இருந்த பொழுது அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில்,”கோப்பை வென்ற வெற்றியாளருக்கு கோப்பை யை வழங்குமிடத்தில் நான் இருந்தால் கண்டிப்பாக விரும்பியிருப்பேன். இது பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. நான் மைதானத்தில்தான் இருந்தேன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற தால், நான் கோப்பையை வழங்க விரும்பமாட்டேன் என்றெல்லாம் கிடையாது. அவர்கள் நன்றாக விளை யாடியதால் வெற்றி பெற்றார்கள். இந்தியராக இருப்பதால், ஆலன்  பார்டருடன் இணைந்து கோப்பையை  வழங்கியிருந்தால் மகிழ்ச்சி யடைந்திருப்பேன்” என வருத்தம் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மழுப்பல் இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்ச்சைக்குரிய வகையில் விளக்கம் அளித்துள்ளது. ஆஸ்திரே லிய கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கோப்பையை வழங்க இருவரும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் இந்தியா வென்றால் கவாஸ்கரும் வழங்குவதாக ஏற்கனவே எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் முடி வெடுத்தது. இதனால் இந்தப் பிரச் சனை இந்தியர்களிடையே சிறிது கசப்பை ஏற்படுத்தியுள்ளது” என கூறினார். கோப்பையின் பெயர் பார்டர் - கவாஸ்கர் என்ற பெயரில் உள்ள நிலை யில், கோப்பை வழங்கும் இடத்தில் கவாஸ்கர் புறக்கணிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம் ஆகும். இது  பிற்காலத்தில் இனவெறிக்கு வழி வகுக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

புஜாரா பற்றி ஏன் பேச வேண்டும்?
ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா?

இந்திய கிரிக்கெட் அணி சொதப் பலான பேட்டிங் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்ற பார்டர் - காவஸ்கர் தொடரை 3-1 (5 போட்டிகளைக்  கொண்ட டெஸ்ட்) என்ற  கணக்கில் இழந்தது.  இந்திய அணி 4ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பொழுதே, தொடர் தோல்வி காரணமாக மூத்த வீரர் புஜாராவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என பிசிசிஐ  தரப்பில் கூறியதாக, அதிகாரப்பூர்வ மற்ற செய்திகள் வெளியாகின.  இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் புஜாராவை சேர்ப்பது நல்ல  விஷயம் தான் என்றாலும், தற்போதே  சூப்பர் பார்மில் இந்திய அணிக்குள் பல்வேறு இளம் வீரர்கள் உள்ளனர். அதாவது சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்தும் ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா, ரஹானே, ஷ்ரயாஸ் போன்றவர்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட 4 பேரும் ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச அளவில் நல்ல அனுபவம் கொண்டுள்ளனர். இவர்களை அணியில் சேர்க்காமல், அனுபவம் இல்லாத புதுமுக வீரர்களு டன் களமிறங்கி இந்திய அணி ஆஸ்தி ரேலிய அணியிடம் அடி மேல் அடி வாங்கியுள்ளது கண்டனத்துக்குரியது.