விழிப்புணர்வு கூட்டம்
தஞ்சாவூர், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பெரிய தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அங்க யற்கண்ணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து பெற் றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடி யோ மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வள மையத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி தலைமை வகித்தார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயிலும் கற்போரிடம் தன்னார்வ லர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படி பாடம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார் வலர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. கருத்தா ளர்களாக ஆசிரியர் அருண், ரஞ்சித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூச்சொரிதல் விழா
தஞ்சாவூர், ஆக.3- தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக் கிழமை சுக்ர வார வழிபாட்டுக் குழு சார்பில் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப் படுவது வழக்கம். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு விழா வுக்கான திருப்பணி நடைபெறுவதால், நிக ழாண்டு பூச்சொரிதல் விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் சுமார் 10 கூடைகளில் கொண்டு வந்த பூக்களால் அம்ம னுக்கு அலங்காரம் செய் யப்பட்டது.
குளம் தூர்வாரும் திட்டம் துவக்கம்
அறந்தாங்கி, ஆக.3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சி மன்றத்திற்குட் பட்ட அய்யனார் கோ வில் குளம் தூர்வாரும் திட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட் டரி சங்க தலைவர் அப்துல் பாரி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட திட்ட செயலா ளர் சசிகுமார் ஃபோம்ரா மற்றும் நீர்நிலைகள் பாது காப்பு திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் குளம் தூர்வாரும் திட் டத்தை துவக்கி வைத்த னர். 3.5 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் தூர்வாரப் பட்டு விவசாயத்திற்கும், கோவில் நிகழ்வுகளுக் கும், மக்கள் பயன்பாட் டிற்கும் அர்ப்பணிக்கப் பட உள்ளது. ரோட்டரி சங்க செயலாளர் ஆண் டோ பிரவின் நன்றி கூறி னார்.
ஆக.27 சென்னையில் முற்றுகை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்ட ஆயத்த மாநாடு
திருவாரூர், ஆக.3 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பாக ஆக.27 அன்று சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டக் களத்திற்கு செல்ல தஞ்சை மண்டல ஆயத்த மாநாடு சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன், திருவாரூர் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, சிஐடியு நாகை மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, மாநில துணைத் தலைவர் தஞ்சை வழக்கறிஞர் பி.ஜேசுதாஸ், மயிலாடுதுறை உள்ளாட்சி செயலாளர் எம்.சேகர், திருவாரூர் மாவட்ட உள்ளாட்சி சங்க செயலாளர் எம்.முரளி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் (டிபிசி) கலந்து கொண்டனர். தஞ்சை மண்டலத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு ஆகஸ்ட் 27 இல் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
பாபநாசம் விற்பனைக் கூடத்தில் எள், உளுந்து, நெல் வகைகள் நல்ல விலைக்கு விற்பனை
பாபநாசம், ஆக.3 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 1,840 விவசாயிகள் 257.6 மெட்ரிக் டன் பருத்தியை விற்ப னைக்கென எடுத்து வந்திருந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பழனி, பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 12 வணிகர்கள் கலந்து கொண்டு அதிகபட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7332, குறைந்தபட்சம் ரூ.6859, சராசரி ரூ.7069 என விலை நிர்ண யித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.1.82 கோடி. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப் பாளர் தாட்சாயிணி தலைமை வகித்தார். மேற்பார்வையா ளர் சிவானந்த் முன்னிலை வகித்தார். விற்பனைக் கூடத்தில் எள் குவிண்டாலுக்கு ரூ.13,000 என அதிகபட்ச விலைக்கும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.9500 என்ற அதிகபட்ச விலைக் கும் விற்பனையானது. மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.
நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி மோசடி: 3 பேர் கைது
கும்பகோணம், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் சரகத் திற்கு உட்பட்ட கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி வீட்டில் உள்ள பெண்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பெற்று, அதனை பாலீஷ் போடும்போது அதனை கரைத்து மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார், சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று வட மாநில இளை ஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலீஷ் போடும்போது, அதை கரைத்து மோசடி செய்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. மேலும் விசாரணை யில், இவர்கள் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலும், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மற்றும் மணப்பாறை பகுதியிலும் இதுபோன்று பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பது தெரிந்தது. மோசடி நபர்களிடம் அவர்கள் பயன்படுத்திய பாலீஷ் பவுடர்கள் மற்றும் இதரப் பொருட்களை பறிமுதல் செய்து பிபின்குமார் (30) என்பவரை கைது செய்தனர். மேலும், சிறுவர்கள் இருவர் இளஞ்சிறார் காப்பகத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றின் புதிய தடுப்பணை 5 மாதத்தில் இடிந்து விழுந்து சேதம்
தமிழக அரசு விசாரணை நடத்த வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஆக.3 - ரூ.6.55 கோடியில் கட்டப்பட்ட கொள்ளி டம் ஆற்றின் தடுப்பணை 5 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. இதில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி அழகிரிபுரம் செக்போஸ்ட் நம்பர் 1 டோல்கேட் வரை கொள்ளிட ஆற்றில் புதிய பாலம் சேதமடையாமல் இருக்க ரூ.6.55 கோடி செலவில் 800 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. தற்போது கொள் ளிடம் ஆற்றில் வந்த தண்ணீரால் இந்தப் பாலம் முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 அன்று திறக்கப்பட்ட இந்த தடுப்புச் சுவர் 5 மாத காலத்திலேயே இடிந்து போனது ஏற்புடையதல்ல. பொதுப் பணித் துறையால் டெண்டர் விட்டு, தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட தடுப்புச் சுவரின் உறுதி தன்மையில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் 2 லட்சம் கனஅடி தண்ணீரை தாங்க முடியாத இந்த கட்டு மானம் முறையான பொறியியல் வல்லு நர்களை கொண்டு கட்டப்பட்டதாக தெரிய வில்லை. மேலும் இது கட்டுமானத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய முறைகேடாகவே தெரி கிறது. 6.55 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே உட னடியாக தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்த பொதுப் பணித்துறை அதிகாரி கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உழவடை வாய்க்காலை தூர்வார வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம், வெள்ளத்தேவன் கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், வி.ச ஒன்றி யச் செயலாளர் பி.கோவிந்தராஜ், வி.ச ஒன்றியத் தலைவர் சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிளைத் தலைவராக ஆர்.பாரத்ராஜ், செயலாளராக எஸ்.அண்ணாதுரை, பொருளாளராக ஆர். பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக எம்.சுப்பையன், துணைச் செயலாளராக எம்.கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு முறையாவது விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். கல்லணையில் இருந்து தற்போது உபரி யாகச் செல்லும் தண்ணீரைக் கொண்டு அனைத்து ஏரி, குளங்களையும் நிரப்பிட வேண்டும். மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். குறிப்பாக உழவடை வாய்க்காலை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருவோணம் ஒன்றியம் ஊரணி புரத்தில் சாலை மறியல் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.
மினி லாரி, பேருந்து மோதியதில் சிறுவன், மூதாட்டி உயிரிழப்பு
தஞ்சாவூர், ஆக.3 - தஞ்சாவூரில் மினி லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தார். தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் மணியர சன். இவரது மகன் ஜபர்சன்(8) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, ரெட்டிப் பாளையம் ரோடு ஆனந்தன் நகரில் அருகே வந்த மினி லாரி ஜபர்சன் மீது மோதியதில் சிறுவன் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்ததும் மினி லாரி ஓட்டுநர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த தஞ்சாவூர் போக்கு வரத்து விசாரணை பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினி பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு தஞ்சாவூர் அருகே கொ.வல்லுண்டாம்பட்டு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி காளியாத் தாள்(69). இவர் வெள்ளிக்கிழமை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மாலை மினி பேருந்தில் ஊர் திரும்பினார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்ததும், மினி பேருந்திலிருந்து இறங்கி முன்னாள் சென்றார். இதை கவனிக்காத மினி பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கிய தும், காளியாத்தாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த தஞ்சாவூர் போக்குவரத்து விசாரணை பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காளி யாத்தாள் உடலை கைப்பற்றி, மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இவ்விபத்து குறித்து போக்குவரத்து விசாரணை பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்ற னர்.
மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு மருதுபாண்டியர் கல்லூரியில் சிறப்பு முகாம்
தஞ்சாவூர், ஆக.3 - தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி வல்லம் கிளை இணைந்து, தமிழக முதலமைச்சரின் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெறுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு புதிய வங்கிக்கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ் ஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு மத்தியக் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு துவங்கப் பட்டது. மேலும், மாணவர்கள் வங்கிக் கணக்கினை சரியாக பராமரிப்பதற்கான ஆலோசனைகள் வங்கி மேலாளர் மூலமாக வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட (அலகு 1) ஒருங்கி ணைப்பாளர் ந.சந்தோஷ்குமார் வரவேற்றார். (அலகு 2) ஒருங்கிணைப்பாளர் து.பூங்குயில் நன்றி கூறினார்.
திறனாய்வுச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஆக.3- பேராசிரியரும் தமிழறிஞருமான ந.சுப்புரெட்டி யார்-100 கல்வி அறக்கட்டளை சார்பாக, 2024 ஆம் ஆண்டுக் கான “திறனாய்வுச் செம்மல் விருது” வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்மொழி, இலக்கியம், தமிழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, அரும் பணி ஆற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டிற்கான விருது 2022-23ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோர், உரிய நூல்கள், தன் விவரக் குறிப்புடன் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்ய லாம். விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப் பெறும். விண்ணப் பங்கள், பரிந்துரைகளை 19.08.2024-க்குள், ந.சுப்பு ரெட்டியார் – திறனாய்வுச் செம்மல் விருது பதிவாளர் (பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
சூப்பர் குளாரினேஷன் செய்யப்படுவதால் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
கும்பகோணம், ஆக.3 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக தலைமை நீரேற்று நிலையம் விளங்குகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கும்பகோணம் மாநக ரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்ப டும் குடிநீரானது கலங்கலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் குடிநீர் கும்பகோணம் மாநக ரத்துக்கு உட்பட்ட வலையப்பேட்டை நீருந்து நிலையத்தில், சூப்பர் குளாரினே ஷன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரினை காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்திட வேண்டும் என கும்பகோ ணம் நகராட்சி நிர்வாகம், கும்பகோணம் பகுதி மக்களிடம் நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
இணை மானிய நிதி தேர்வுக்குழு கூட்டம்
புதுக்கோட்டை, ஆக.3 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகத்தில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இணை மானிய நிதி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகை யில் ‘தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த இணை மானிய நிதி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 22 அயல் நாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரிய அட்டை கள் வழங்கப்பட்டன. மேலும் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்துடன் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இக்கடனுதவியினை தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி தொழில் தொடங்கி பொருளாதா ரத்தில் முன்னேற்றம் அடைய அறிவுறுத்தப் பட்டுள்ளது. தமிழக அரசின் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, அயல்நாடு வாழ் தமிழர்கள் அனைவரும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும்” என்றார்.