சமுதாய அமைப்புகள் தணிக்கை
தணிக்கையாளர்கள், தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சுய உதவி குழுக்கள் ஆகிய சமுதாய அமைப்புகளை 2023-24-ஆம் ஆண்டிற்கு தணிக்கை செய்திட தகுதியான விருப்ப முள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவ னங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட சமுதாய அமைப்புகளை 2023-24-ஆம் ஆண்டிற்கு தணிக்கை செய்திட தகுதியான விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் அரசு துறைகள் (அ) அரசு திட்டங்கள் (அ) தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்த பட்சம் தணிக்கை யில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண் டும். மற்றும் சுய உதவிக்குழுக்கள், வாழ்வாதார திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தணிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் பிற விவரங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை தஞ்சாவூர் மாவட்ட அரசு இணைய தளத்தில் www.thanjavur.nic.in -இல் காணலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணை இயக்கு நர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்: 223- இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர்- 613 010 என்ற முகவரிக்கு 27.07. 2024 அன்று அல்லது அதற்கு முன் சென்றடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, விருது
பாபநாசம், ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் 2023 - 24 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசு, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவேகானந்தா கல்விச் சங்க பயிற்சி கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல்-நீதித் துறை நடுவர் அப்துல் கனி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் தேவராசன் வரவேற்றார். பாப நாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உதவித் தலைமையாசி ரியர் லோகநாதன், அய்யம்பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் அன்பழகன், பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியை நீலா தேவி, திருக்கருக்காவூர் அரசு மேல் நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் செந்தில் குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் அரசு பொதுத் தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற 25 மாணவர்களுக்கு பணப் பரிசு, விருதுகள் வழங்கப்பட்டன.