திருவாரூர், மே 5- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அதுல்குமார் அஞ்சன் மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பாக திருவாரூரில் அமைதி பேரணி மற்றும் புக ழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அர்ப்பணிப்பு உணர்வோடு தன்ன லமற்று பொது வாழ்வில் வாழ்ந்து காட்டிய தோழர் அதுல்குமார் அஞ்சன் மறைவை யொட்டி, திருவாரூர் பழைய ரயில் நிலை யத்திலிருந்து துவங்கிய அமைதிப் பேரணி, புதிய ரயில் நிலையத்தின் நிறைவு பெற்று புக ழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, சிபிஐ பொறுப்புச் செயலாளர் எஸ்.கேசவராஜ் மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் (சிபிஎம்) எஸ்.தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலை வர் கே.உலகநாதன், விசிக மாவட்டச் செய லாளர் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட வர்க்க வெகுஜன அரங்கத்தினர், அனைத்து கட்சியி னர் பங்கேற்றனர்.