திருச்சிராப்பள்ளி/புதுக்கோட்டை, ஜூலை 15-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் மாவட்டச் செயலாளராக இருப் பவர் பெரியசாமி. இவர் போலி லாட்டரி விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள் ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலி லாட்டரி விற்பனைக் கும்பல் வியாழக் கிழமை பயங்கரமான ஆயுதங்களுடன் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை கண்டித்து வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் அய்யாவு தலைமை வகித்தார். வாலிபர் சங்க வட்ட பொருளா ளர் வினோத்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம், வட்டக் குழு செயலாளர் கோபால கிருஷ்ணன், வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஆட்டோ சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுக்கோட்டை
வாலிபர் சங்கத்தின் சார்பில் வெள்ளி யன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகரச் செய லாளர் கு.ஜெகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், துணைச் செயலாளர் அ.சரவணன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலை யப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப் பன், ஏ.ரவிச்சந்திரன், டி.சிம்சன், சி.விஜய காந்த், ஒன்றியச் செயலாளர்கள் டி.ஜி.ரவிச் சந்திரன், ஏ.ஆர்.விஜய் (மயிலாடுதுறை நகரம்), அசோகன், கேசவன், மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.