மதுரை, மே 7-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூர் அருகே உள்ள மங்கலம் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுவததில் அருவி சுற்றுலாப் பயணிகளின் கவ னத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 5,200 சதுர மைல் பரப்பள வில் பரந்து விரிந்திருக்கும் இந்த மலைகள், 1,770 முதல் 4,620 அடி உயரம் வரை பரந்து விரிந்த இயற்கை அழகின் பொக்கிஷமா கும். நீரோடைகள் முதல் அதன் பரந்த காட்சிகள் வரை, பச்சமலை யில் ஆராயவும் கண்டறியவும் நிறைய இருக்கிறது.
வனத்துறை கணக்கெடுப் பின்படி இந்த மலையில் 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வலசை வந்து செல்கின்றன. மேலும் இங்கு உள்ள காப்புக் காடு களில் மான்கள் வாழ்கின்றன. இந்த மலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவிகள் உள்ளன
திருச்சிராப்பள்ளியிலிருந்து துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வழியாக சாலை மார்க்கமாகச் சென்று செங்காட்டுப்பட்டியை சென்றடையவேண்டும். செங் காட்டுப்பட்டியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் மங்கலம் அருவி அமைந்துள்ளது. மேல் செங்காட்டுப் பட்டியிலிருந்து சின்ன பாக்கலம், பெரிய பாக்கலம், சின்னமங்கலம் கிராமங்கள் வழியாகச் செல்ல வேண்டும்.
வனத் துறைமேல் செங்காட்டுப் பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கும் வசதி உட்பட சில ஏற்பாடுகளைச் செய்திருந்தது. போதுமான உள்கட்டமைப்பு இல்லாததால் பச்சமலை மலை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வனத்துறை சார்பில், 14 கி.மீ., துாரத்திற்கு ரூ.8.50 கோடி செலவில், ஷோபனாபுரம் - மேல் செங்காட்டுப்பட்டி காட்டு ரோடு, சமீபத்தில், சீரமைக்கப்பட்டது. இது பச்சமலை மலைப்பகுதிக்கு அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.