தூத்துக்குடி, அக்.30- திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவி லுக்கும், அய்யா வை குண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்க மாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முந்தைய சில நாட்கள், பிந்தைய சில நாட்களில் காலையில் கடல்நீர் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்பு வதும் வழக்கமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் வியாழ னன்று மாலையில் அமா வாசை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு செவ்வா யன்று காலையில் திருச் செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாறைகள் பச்சை பசேல் என்று வெளியே தெரிந்தன. பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும் பியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்ச மும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.