districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஏகோஜி மகாராஜபுரத்தில்  21 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 27- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 21 ஆவது  நாளான சனிக்கிழமையும் போராட்டம் நடைப்பெற்றது.

குடியிருக்க இடம் கேட்டு அரசு புறம்போக்கு இடத்தில்  குடிசை அமைத்து போராடி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் இடத்தை பிரித்து தராமல் அலட்சியம் காட்டி னர். இதனால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 45 குடும்பங் களுக்கு இடங்கள் பிரிக்கப்பட்டு வழங்கிய நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினரும் கூரைகளை அமைத்தனர். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் சுவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் மற்றும்  கட்சி நிர்வாகிகள் சுவர் அமைக்கும் பணியைப் பார்வையிட்டனர்.

சிறைச்சாலை பார்வையாளர்களாக சமூக ஆர்வலர்கள் 2 பேர் நியமனம்

அரியலூர், ஜூலை 27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலைக்கு, அலுவலர் சாரா பார்வையாளர்களாக சமூக ஆர்வலர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக டிஜிபி (சிறைச்சாலை) மகேஸ்வர் தயாள் ஐபிஎஸ், ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலைக்கு அலுவல் சாரா பார்வையாளர்களாக சமூக ஆர்வலர்கள் ஆர்.கே.செல்வமணி, பரப்ரம்மம் அறக்கட்டளை நிர்வாகி  முத்துக்குமரன் ஆகியோரை, சிறையில் உள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு நியமித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் திருச்சி மத்திய சிறைச்சாலை  கண்காணிப்பாளர், நகல்கள் தமிழக உள்துறைச் செயலாளர், அரியலூர் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி சரக டிஐஜி  உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை  அமல்படுத்த கோரிக்கை

அறந்தாங்கி, ஜூலை 27-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு  அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 8 ஆம் ஆண்டு  வட்டப் பேரவை அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

பேரவைக்கு வட்டத் தலைவர் வி.கதிரேசன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் ஆர். நாக ராஜன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் எம்.நம்பிரா ஜன் அறிக்கை சமர்ப்பித்தார். வட்டப் பொருளாளர் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார். நில அளவை துறை உதவி இயக்குநர் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக் கிளை துணைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப் பாளர் தாட்சாயிணி தலைமை வகித்தார். மேற்பார்வை யாளர் சிவானந்த் முன்னிலை வகித்தார். 

ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து மொத்தம் 2264 விவசாயிகள், 320 மெ. டன் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்ப னார்கோயில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரப் பிரதே சம், தெலுங்கானா, கர்நாடகா, மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 வணிகர்கள் கலந்து கொண்டனர். பருத்தி யின் மதிப்பு ரூ.2 கோடி. தனியார் வணிகர்கள் அதிகபட்சம்  குவிண்டாலுக்கு ரூ.6939, குறைந்தபட்சம் ரூ.6309, சராசரி ரூ.6659 என விலை நிர்ணயம் செய்தனர்.

இல்லம் தேடிக் கல்வி  தன்னார்வலர்களுக்கு பயிற்சி

அறந்தாங்கி, ஜூலை 27 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி 2.0 தன்னார்வலர்களுக்கு ஒரு நாள்  பயிற்சியை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இப்பயிற்சி யின் நோக்கம் அனைத்து குழந்தைகளுக்கும் மொழிப் பாடத்தில் அடிப்படை கற்றல் திறன்களை முழுமையாக அடையச் செய்தல் வேண்டும். தன்னார்வலர் ஒவ்வொரு பாடத்தையும் குறிப்பிட்டுள்ள பாட வேளைகளில் நடத்தி முடிக்க வேண்டும். மாணவர்கள் அடிப்படை திறன் களை பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவுத் திறன் அட்டவணையில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பயிற்சியை இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப் பாளர் கண்ணன் வழங்கினார். 22 தன்னார்வலர்கள் பயிற்சி  பெற்றனர்.

தஞ்சை ஆட்சியருக்கு எம்எல்ஏ வாழ்த்து

பாபநாசம், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப் பேற்ற பிரியங்கா பங்கஜத்தை, மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவா ஹிருல்லா நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நீண்ட கால மாக நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க  வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார்.

1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

புதுக்கோட்டை, ஜூலை 27- குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், சரக்கு வாகனத் தில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம்- அறந்தாங்கி சாலையில் உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையில் குடிமைப்  பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை  போலீசார் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாகுடி பகுதி சாலையில்,  ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 30 மூட்டைகளில் 1500 கிலோ  ரேசன் அரிசி இருந்தது. இதைக் கைப்பற்றிய  போலீசார், இதுதொடர்பாக மணமேல்குடி பொத்தையன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயபால் (53), திருமயம் கீழாநிலை கும்பங் குடியைச் சேர்ந்த சிவாஜி (44) ஆகிய இரு வரையும் கைது செய்தனர்.