திருச்சிராப்பள்ளி, மே 17-
திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசா நகர் 4-வது தெருவில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நித்யா என்பவரிடமிருந்து சுமார் ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரி யாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 394-ன் கீழ் (தன்னிச்சையாக கொள்ளையடித்து காயப் படுத்துதல்) வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.