districts

சிபிஎம் குடவாசல் அலுவலகத்தில் காதலர்களுக்கு திருமணம்

திருவாரூர், ஆக.11 -

      காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காத லன் வீட்டுக்கு வந்த இளம் பெண்ணுக்கு,  உறவினர்கள் வேண்டுகோளின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் அலுவ லகத்தில் திருமணம் நடை பெற்றது.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், மணக்கால்-கீரங்குடியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஏ. அன்பரசி (18). இவரின் காதலை தந்தை ஏற்காத தால் திருவாரூர் அருகே உள்ள மேம்மங்கலத்தில் உள்ள காதலன் ஜெ.ஆனஸ்ட் ராஜ் (24) வீட்டிற்குச் சென்று, தந்தை என்னை கொடு மைப்படுத்துவ தாகவும், தன்னை திருமணம் செய்து  கொள்ளுமாறும் கூறி யுள்ளார்.  

    இதனையடுத்து ஆனஸ்ட் ராஜ், குடவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, உடனடியாக உற வினர்களுடன் குடவாசல் காவல் நிலையம் சென் றார். எங்களுக்கு உரிய பாது காப்புடன் திருமணம் செய்து  வைக்க வேண்டும் என  இருவரும் காவல் ஆய்வாள ரிடம் முறையிட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல்  தலைவர்களிடம் எங்க ளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இதையொட்டி குட வாசல் காவல் நிலையம்  சென்ற கட்சித் தலைவர்கள்,  காவல் ஆய்வாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில் சிபிஎம் அலுவல கத்தில். தலைவர்கள் முன்னி லையில் திருமணம் நடை பெற வேண்டும் என்ற உற வினர்களின் கோரிக்கையை ஏற்று, காவல்துறையின் ஒப்புதல் அளித்தனர். இதன்பேரில், கட்சியின் குடவாசல் அலுவலகத்தில் காதலர்கள் ஆனஸ்ட் ராஜ்-அன்பரசி ஆகியோருக்கு கீரங்குடி ஊராட்சி மன்றத்  தலைவரும், சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினருமான எஸ்.கிருஸ்துவநாதன் தலை மையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  

    இதில் கட்சியின் குட வாசல் தெற்கு பகுதி ஒன்றி யக் குழு செயலாளர் எம்.கோபிராஜ், மாவட்டக் குழு  உறுப்பினர் எப்.கெரக் கோரியா, நகரக்குழு செய லாளர் டி.ஜி.சேகர் உள் ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில், ஆட்டோ சங்கத்தின் திருவா ரூர் மாவட்ட துணைத் தலை வர் ஏ.ஒன்.மணி மற்றும் மண மகனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.