districts

img

முள்ளிப்பாடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.27 லட்சம் மதிப்பீட்டில், சமுதாய கூடம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட முள்ளிப்பாடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.27 லட்சம் மதிப்பீட்டில், சமுதாய கூடம் மற்றும் பேருந்து நிழற்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இவற்றை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முள்ளிப்பாடி  ஊராட்சி மன்றத் தலைவர் நீலா வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.