districts

மயிலாடுதுறையில் சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு

மயிலாடுதுறை, டிச.27- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு  சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பல்  வேறு பணிகளை ஆய்வு செய்தனர். வைத்  தீஸ்வரன் கோயில் வேளாண்மை விரி வாக்க மைய செயல்பாடுகள், தென்னலக்  குடியில் சாலை அமைக்கும் பணி, திரு நாங்கூர் பெருமாள் கோயில் பக்தர்கள் தங்  கும் விடுதி, சீர்காழி அரசு மருத்துவமனை, சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் செயல்  படும் அரசு இ-சேவை மைய செயல்பாடுகள் மற்றும் மயிலாடுதுறை அரசு ஆதிதிரா விடர் நலப் பள்ளி மாணவிகள் விடுதி, மயி லாடுதுறை அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆகிய இடங்களை சட்ட மன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு வினர் ஆய்வு செய்தனர். பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு. செல்வபெருந்தகை தலைமையில், காட்டு மன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனை செல்வன், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்.  ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த  அதிகாரிகள் உடனிருந்தனர்.