திருவாரூர், ஜூலை 27-
100- நாள் வேலையைத் திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் பேரூராட்சியில் அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
அமைப்பின் ஒன்றியத்தலைவர் என்.சுப்பரமணியன், மாவட்டச்செயலாளர் பி.கந்தசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் என்.இராதா, நகர் செய லாளர் கே.முரளி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் கே.சுப்பரமணியன், கே.கலியபெருமாள், டி.சண்முகம், எஸ். இளங்கோவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.