தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு தெருவுக்கு குறைந்தது 50 நாய்கள் இருப்பதால், அவைகளை பிடிக்க வேண்டும் என கோரி பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி 21 ஆவது வார்டு உறுப்பினர் நாடிமுத்து, குழந்தைகள் அணியும் நாய் போன்ற முகமூடியை அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.