ராணிப்பேட்டை, பிப். 13 - ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், பூட்டுத்தாக்கு ஊராட்சி கன்னிகா புரத்தில் பல ஆண்டுகளாக 105 வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாணை கிடைத்ததும், பட்டா வழங்குவதாக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் விவ சாய சங்கம் தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார். கன்னிகாபுரம் பகுதியில் சர்வே எண். 148 ல் பல ஆண்டுகளுக்கு மேலாக 105 வீடுகள் கட்டி வாழ்ந்தனர். இந்த வீடுகளுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில், வியாழனன்று (பிப். 13) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கன்னிகாபுரம் கிளைத் தலைவர் எம். தனபால் தலைமையில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பட்டா வழங்க கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்ததும், பட்டா வழங்குவதாக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் விவசாய சங்க தலைவர்களிடம் உறுதி அளித்தார். இந்த போராட்டத்தை விவசாயிகள் சங்க மாநில இணைச் செயலாளர் துளசி நாராயணன் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைச் செயலாளர் இரா. சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, மாவட்டப் பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.சந்திரன், என்.ரமேஷ், தாமோதரன், ரேணு, சேகர், ஆர்.மணிகண்டன், ஜி.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.