districts

img

குடும்பத் தலைவிகளின் உழைப்பை போற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்

மயிலாடுதுறை, அக்30 - குடும்பத் தலைவிகளின் விலையில்லா உழைப்பை போற் றும் விதமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் தமிழ்நாடு முதல மைச்சருக்கு, இதன்மூலம் பயன டைந்த பெண்கள் நன்றி தெரிவித்த னர். தமிழ்நாடு அரசு, பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் சமூக பொருளாதாரப் பாதுகாப் பினை உறுதி செய்வதற்கு தேவை யான திட்டங்களை வகுத்து செயல் படுத்தி வருகிறது. அதேபோன்று, அரசின் மக்கள் நலத் திட்டங்களை கடைக்கோடி பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்க்கிற வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2,84,170 குடும்ப அட்டைகளும், 413 நியாய விலைக் கடைகளும் உள்ளன.  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எம்.பன்னீர செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயி லாடுதுறை) ஆகியோர் முன்னிலை யில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், 9312 பய னாளிகளுக்கு பற்று அட்டை, காகிதப் பையில் அரசின் தொகுப்பு புத்தகம்  ஆகியவற்றை வழங்கினார்.  இத்திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 1,54,33 பயனாளி களுக்கு மாதம் ரூ.1000, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட பயனாளி காயத்திரி  கூறுகையில், “நான் மயிலாடு துறை மாவட்டம், அருள்மொழித் தேவன் கிராமத்தில் வசித்து வரு கிறேன். இந்தியாவில் எந்த முதல மைச்சர்களும் செய்யாத திட்ட மான, கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டா லின் செய்து வருகிறார். எங்களை போன்ற ஏழைப் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டம். மாதம் 1000 ரூபாய் வழங்குவதால், என் பிள்ளைகளின் செலவிற்கு பெரும் உதவியாக இருக்கிறது. இந்த திட்டத்தை வழங்கிய முதல்வ ருக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார். பயனாளி கிரிஜா கூறுகை யில், டவுன் ஸ்டேசன் தென்புறம் வசித்து வருகிறேன். நான் விவ சாயக் கூலி வேலை செய்து வரு கிறேன். எனது அன்றாடக் கூலியை  வைத்து குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. தமிழ்நாடு  முதலமைச்சர் கலைஞர் மகளிர்  உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ. 1000 வழங்குவதால், எங்களின் மருத்துவச் செலவு, எனது பிள்ளை களின் படிப்பு செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார். தொகுப்பு: கார்த்திகேயன் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், மயிலாடுதுறை