கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உள்ளிட்டோர் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினர். நாகை நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், நாகப்பட்டினம் மாவட்ட வழங்கல் அலுவலர் கோ.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.