மன்னார்குடி,நவ.3- முன்னாள் முதல்வர் டாக் டர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மன்னார் குடி ராஜகோபாலசாமி அர சினர் கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு திரு வாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டி. சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். சட்ட மன்ற பேரவை கூடுதல் செய லாளர் என் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் து. ராஜேந்திரன் வரவேற்றா.ர் .மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அவர் களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனை வர் நா. தனராஜன் வாழ்த் துரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் சிறப்புரையாற்றினார். வில்வித்தையில் முன்னேறி வரும் மாணவி பி அஜிஷாவிற்கு புதிய வில் உபகரணம் வாங்குவதற்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கல்லூரி பேராசிரியை முனைவர் ராதிகா மணிமாறன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். இதில் மன்னார் குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலை யாமங்கலம் பாலு மற்றும் பலர் பங்கேற்றனர்.