தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், புனல்வாசல் கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏவும், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா ளருமான கா.அண்ணாதுரை நூலகத்தை திறந்து வைத்தார். நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், பெரியார் அண்ணா கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் நூல்கள் இடம்பெற்றன. இதேபோல் அதிராம்பட்டினத்திலும் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. பாபநாசம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடந்தது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலர் இளையராஜா நூலகத்தை திறந்து வைத்தார்.