பாபநாசம், நவ.19- கும்பகோணம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், சுந்தரப் பெருமாள்கோவில் ஊராட்சிகளில், கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தில், மூன்றாவது பகுதியாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 13 பய னாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் அருகே திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கலந்து கொண்டு, திருவ லஞ்சுழி, பட்டீஸ்வரம், சுந்தரப் பெருமாள்கோவில் ஊராட்சி களைச் சேர்ந்த 13 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுந்தரப் பெரு மாள்கோவில் சேதுராமன், திருவலஞ்சுழி திவ்யா, ஒன்றி யக் குழு உறுப்பினர் அன்பழகன், மமக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் ரஹ்மத் அலி, திமுக ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன், பொருளாளர் இளங்கோவன், மாவட்டப் பிரதிநிதி கரிகாலன் உட்பட கிராம மக்கள் கலந்துக் கொண்டனர்.