மதுரை, ஜூன் 2- விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நுண்கலை பயிற்சி முகாமில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையபபட்ட ஒவி யங்களின் கண்காட்சி மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஜூன் 1 சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதனை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ சங்கீதா, விருது நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனை வர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூறுகையில், அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட சிறந்த எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், பழங்குடி ஓவியங்கள், துணி ஓவியங்கள், காகித அச்சுக்கலை ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், கோடுகளால் வரையப்பட்ட ஓவி யங்கள் என மொத்தம் 300க்கும் மேற் பட்ட ஒவியங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக மதுரை யில் அமைந்துள்ள கலைஞர் நூற் றாண்டு நூலக வளாகத்தில் ஒவியக் கண்காட்சியாக காட்சிப்படுத்தப்பட்டி ருக்கிறது. இந்து ஒவியக் கண்காட்சியானது ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும். எனவே, இந்த அருமையான படைப்புகளை படைத்த மாண வர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவியர்களும் இந்த ஓவியக் கண்காட்சியினை பார்வையிட வேண்டும் என்று தெரிவித்தனர்.