தூத்துக்குடி, ஜூன் 9
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் 2021-2022 முதல் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
அவ்வாணையின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டு வரையில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன. கலை விருதுகள், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்படவுள்ளது.
ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வய திற்குட்பட்ட கலைஞர்களுக்கு - கலை வளர்மணி, 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு - கலைச் சுடர்மணி, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு - கலை நன்மணி, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு - கலை முதுமணி என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னா டையும் வழங்கப்படும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமா மணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.
மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதியதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். அவ்வகையில் 2022-2023 மற்றும் 2023-2024ஆம் ஆண்டிற்கு மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையால் வரவேற்கப் படுகின்றன.
கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளத்தில் (www.artandculture.tn.gov.in) இணைய வழியில் மாவட்டக் கலை மன்ற விருதிற்கு விண்ணப்பித்திட ஏதுவாக விண்ணப்பங்கள் (Online Application) கலைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆதலால், மாவட்ட அளவில் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தகுதியுள்ள கலைஞர்கள் 15-07-2023-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரி வித்துள்ளார்.