தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் மாவட்டத்தில், விபத்து மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை துரிதமாக செயல் படுத்த, ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய நவீன கருவிகள் கொண்ட வாகனம் தஞ்சாவூர் மாவட்ட தீய ணைப்பு நிலையத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு நவீன கருவிகளை கையாளுவது குறித்து இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை உள்பட 9 இடங்களில் தீய ணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்க ளில் தீயை அணைக்க கூடிய வாகனங்கள், மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படக் கூடிய கருவி கள் ஆகியவை உள்ளன. இந்நிலையில் பேரிடர் மீட்பு மற்றும் விபத்துகளில் சிக்கிய வர்களை விரைந்து மீட்கும் வகை யில், அதற்கேற்ற பிரத்யேக வாகனம் தமிழ்நாட்டின் 10 மாவட் டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு வழங்கப் பட்டன. அதில் தஞ்சாவூர் மாவட்டத் துக்கு ஒரு வாகனம் வழங்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த வாகனம், தஞ்சாவூர் அரண் மனை வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்துக்கு வந்தது. இந்த வாகனத்தில் உள்ள அதிநவீனப் பொருட்களின் செயல் பாடுகளை தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் விதமாக, செவ்வா யன்று மாவட்டம் முழுவதும் உள்ள 80 தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 6 அன்று மீதமுள்ள 70 தீயணைப்பு வீரர் களுக்கு இந்த செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செயல்விளக்கப் பயிற்சியை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய மாவட்ட அலுவலர் ச.குமார் தொடங்கி வைத்தார்.