districts

புத்தகங்களை ஆயுதமாக்கி தடைகளை தாண்டி தடம் பதிக்க வேண்டும்

அரியலூர், ஜூன் 30 - தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில், சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை யொட்டி, அரியலூர் மாவட்டம் உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா தலைமை வகித்தார். இம்முகாமில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, தலைமை காவலர் சுமதி, வட்ட சட்டப் பணிகள் குழுவின் பட்டியல் வழக்கறிஞர்‌ மாசிலாமணி, வேல்முருகன் ஆகியோர் மாணவர்களுக்கு போக்சோ சட்டம், குழந்தை திருமணச் சட்டம், போதை ஒழிப்புச்  சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீதிபதி டாக்டர் லதா ஆற்றிய உரை யில், “இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். சமூகத்தில் நடைபெறும் குற்றங் களில், பெரும்பாலான குற்றங்களின் பின்ன ணியில் போதை பொருளே காரணியாக உள்ளது. அதிலும் பெரும்பாலான குற்ற வாளிகள் 18 வயதிற்குட்பட்ட சிறார்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கை  சொல்கிறது. அதிகார போதை, ஆணவ போதை, பதவி போதை, கஞ்சா, பீடி, சிக ரெட் போன்ற மது வகைகளை பயன்படுத்து வதால் ஏற்படும் போதைகள் நாம் அறிந் தவை.  ஆனால் அந்த பட்டியலில் இன்றைக்கு கைப்பேசியையும் ஒரு போதைப் பொருளாக சேர்க்க வேண்டியுள்ளது. கஞ்சா சாப்பிடும் போது சுரக்கும் டோப்போமைன் என்ற சுரப்பி,  நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத் திற்கு கிடைக்கும் லைக்குகளுக்காக காத்தி ருக்கும் அந்த ஒரு நிமிடத்தில், அதிகளவில் சுரப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறது. எனவே மாணவர்கள் தங்களது சுய முன் னேற்றத்திற்காக செல்போனை தேவையான பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும். டாக்டர் அம்பேத்கர் போல புத்தகங்களை ஆயுதமாக்கி தடைகள் தாண்டி தடம் பதிக்க  வேண்டும்” என்றார்.  பின்பு, கேள்விகளுக்கு சிறப்பாக பதி லளித்த இரு மாணவர்களுக்கு புத்தகங்களை  பரிசாக வழங்கினார். பள்ளியில் நடைபெற்ற  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு, வட்ட சட்டப்பணிகள் குழுவின்  தலைவர் மற்றும் சார்பு நீதிபதி லதா பரிசு களை வழங்கினார். முன்னதாக, தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். துணை தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.