கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நேசனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கட்டுரை, பேச்சுப் போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.