districts

img

அரியலூர் பேருந்து நிலையம் அரசு கலைக் கல்லூரி புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

அரியலூர், ஆக.1 -

      அரியலூர் பேருந்து நிலையம் - அரசு கலைக் கல்லூரி புதிய வழித் தடத்தில் செவ்வாயன்று புதிய பேருந்துகள் இயக்கி வைக்  கப்பட்டன.

    பேருந்து நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பேருந்து சேவையினை கொடி யசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலை மை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.

      தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் (கும்ப)லிட், மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல், அரியலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் ஜோ.டொமினிக் அமல்ராஜ், அரியலூர் நகர்மன்ற  துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.