districts

img

அறந்தாங்கி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

அறந்தாங்கி, ஜூன் 20-   வருங்கால வைப்பு நிதி தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலக வாயில் முன்பு சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர்  குடும்பத்துடன்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த போராட்டத்திற்கு சிஜடியு பொதுச் செயலாளர் க.முகமது அலி ஜின்னா தலைமை வகித்து பேசினார். சிஐடியு  ஒருங்கினைப்பாளர் ஆர். கர்ணா முன்னிலை வகித்தார்,  அறந்தாங்கி நகராட்சி யில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியா ளர்கள் 154 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் கூட்டுறவு சொசைட்டி பணம் உரிய நிறுவனத்தில் செலுத்த வில்லை. அதனால் தொழி லாளிகள் கடன் பெறுவதில் சிரமம் உள்ளது .மேலும் பெற்ற கடனுக்கு கூட்டு வட்டி செலுத்த வேண்டி யுள்ளது, தூய்மை பணியை ஒப்பந்தத்தில் எடுத்துள்ள ராம் அன் கோ சென்னை நிறுவனம்,  கடந்த ஆகஸ்ட் 2023 முதல் பணியாளர்க ளுக்கு முறையான சம்பள வழங்க வில்லை. மேலும் மாத சம்பளம் ஏழாம் தேதி க்குள் வழங்க வேண்டும்,

சம்பள பட்டியல் அவரவர் பெயர்களில் வழங்க வேண்டும், “ இ எஸ் ஐ கார்டு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. போராட்டத்தில் கிளை நிர்வாகிகள் குமார், மாணிக்கம், ராமலிங்கம், செல்வம், சுப்பிரமணியம் உள்பட தூய்மைப் பணியா ளர்கள கலந்து கொண்ட னர்.