நாகர்கோவில், நவ.3- காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கன்னி யாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை தாக்கியதுடன் கடும் அத்து மீறலில் ஈடுபட்டதாகவும், ஒரு பட்டியலின குடும்பத்தையே போதையில் வந்த உதவி ஆய்வாளர் நர வேட்டையாடியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இ.சுவெதா (21) மருத்துவமனையில் இருந்து தனது தயார் அருள் செல்வி மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனக்கு இரு சகோதரர்கள் உண்டு. மூத்த அண்ணன் மதன்குமார் மாவட்ட வேளாண் துறையில் டிரைவராக பணிபுரிந்து வரு கிறார். இளைய அண்ணன் வசந்த்குமார் பெயின்டிங் காண்ட்ராக்டர். இரவு (அக்.1) சுமார் 8.40 மணியளவில் ஆரல்வாய்மொழி யில் பொருட்கள் வாங்க அண்ணன்கள் இருவரும் வெளியே சென்றபோது காவல் உதவி ஆய்வாளரும், மற்றொருவரும் இரு சக்கர வாகனத்திலும், காவல் நிலைய எழுத்தர் செந்தில் காரிலும் வந்து அண்ணன் கள் சென்ற இருச்சரக வாகனத்தை நிறுத்தி னர். செந்தில் எனது அண்ணன் மதனின் சட்டையை பிடித்து, தீபாவளிக்கு கேஸ் குறைவு நீ ரிமாண்டுக்கு போ என்று கை யில் இருந்த பைப்பால் கைகளில் அடித்தார். தடுத்ததும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரைட்டர் செந்தில், ஓங்கி அடித்தார். தடுக்க வந்த என்னையும் தாக்கினார். பின்பு மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மொபைல்போனை பறிக்க முயன் றார். நான் தர மறுத்ததும் என்னை இழிவாக நடத்தி போனைப் பறித்து, தகாத வார்த்தை களால் பேசி எனது கன்னத்தில் ஓங்கி அடித்தார். தடுக்க வந்த எனது உறவினர் மஞ்சு பார்கவியை மகேந்திரன், (எஸ்.ஐ) வயிற்றில் ஓங்கி மிதித்து கீழே தள்ளினார். கீழே விழுந்த பார்க்கவியை செந்தில் கம்பால் தாக்கினார். வலது கை, வயிறு, உடலில் காயங்கள் ஏற்பட்டு கதறி அழுதாள். தடுக்க வந்த வசந்த குமாரை, மகேந்திரன்‘ கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தினார். நான் எனது அண்ணனை காப்பாற்ற முயன்றபோது என்னை மான பங்கப்படுத்தி கீழே தள்ளினார். எங்களது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் வந்ததும், வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிட்டனர். 108 ஆம்புலன் மூலம் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டோம்” என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறையினர் நடவ டிக்கை ஏதும் எடுக்காததற்கு, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் தலை வர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆசாரி பள்ளம் மருத்துவனையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தோவாளை வட்டாரச் செயலாளர் எஸ்.மிக்கேல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளான கலைச்செல்வி, கோபி பேரறிவாளன் உள்ளிட்டோர் பாதிக்கப் பட்டோரை அக்.3 ஞாயிறன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.