அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே பல ஆண்டுகளாக தூர் வாரப்படாத அல்லறை கண்மாய் வரத்து வாரியை ஊராட்சி மன்றத் தலைவர் ஏற்பாட்டில், தன்னார்வ லர்கள் உதவியோடு தூர்வாரும் பணி தொடங்கியது. இப்பணியை தொடங்கிய ஆமாஞ்சி ஊராட்சி மன்றத் தலை வருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகா ஆமாஞ்சி ஊராட்சிக் குட்பட்ட அல்லறை மேலவயல் கிரா மம் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பகுதி குண்டகவயல் மற்றும் துரை யரசபுரம் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய அல்லறை கண்மாய் உள்ளது. 750 ஏக்கருக்கு மேலான இப்பகுதியில் இருக்கக் கூடிய விவசாயிகள், இந்த குளத்தில் உள்ள நீரை நம்பி விவசா யம் செய்கின்றனர். இந்த குளத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக நீர் நிரம்பாமல் உள்ள தால், விவசாயம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதனால் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர்களை சந்தித்து மனுக்கள் அளித்தும், எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆமாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன் என்பவரிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தனர். கோரிக் கையின் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் பல தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அல்லறை கண் மாய்க்கு வரும் வரத்து வாரியை தூர்வா ரும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.