districts

img

மாணவர்களின் விமான பயணக்கனவை நிறைவேற்றிய ஆசிரியருக்கு பாராட்டு விழா

தென்காசி, பிப். 4- பள்ளி மாணவர்களின் விமான  பயணக் கனவை நிறைவேற்றிய ஆசிரியருக்கு பாராட்டு விழா தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (டி.என்.பி.டி.எப்) ஆலங்குளம் வட்டாரக் கிளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர் வேதமுத்து மோட்சக்கண் தலைமை தாங்கினார்.  வட்டாரச் செயலாளர் பவுல் அந்தோணிராஜ், பொருளாளர் கமலம், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களான பாலச்சந்திரன், மதுசூதன பெருமாள், வசந்தி, சாராள் பேபி, ராஜேஸ்வரி, சந்திரகுமார், கென்னடி ஆகியோரின் பணி நிறைவினை பாராட்டிப் பேசி மாநில தலைவர் மணிமேகலை நினைவுப்பரிசுகளை வழங்கினார். 2024-2025 கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்காக தமிழக அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆலங்குளம் வட்டாரம் ஊத்துமலை ஆர்சி பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.  கீழப்பாவூர் ஒன்றியம், கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்களின் விமான பயண கனவை தனது சொந்த செலவில் நிறைவேற்றிய தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜின் பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் சசிகுமார் மற்றும் மாநிலச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.