districts

img

இலக்கியப் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா

புதுக்கோட்டை, ஜூன் 30 - புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 3 இலக்கியப் படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. பழங்காலப் பொருட்களை காட்சிப் படுத்தி வரும் கவிஞர் சு.பீர்முகமது, ‘முட்டிக்குறிச்சி’ நாவலுக்கு சௌமா விருது பெறும் எழுத்தாளர் சோலச்சி, சிறந்த ஹைக்கூ கவிதைக்கான அப்துல்ரகுமான் விருது பெறும் கவிஞர் நேசன் மகதி ஆகி யோர் பாராட்டப்பட்டனர். விழாவுக்கு புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி  தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன், வாசகர் பேரவையின் செயலர் பேராசிரியர் சா.விஸ்வநாதன், தமிழ்ச் சங்கச் செயலர் மகா  சுந்தர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.